districts

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

தஞ்சாவூர், ஜூலை 29-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், வேளாண்மைத் துறை சார்பில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி தண்ணீரினை விவசாயத்திற்கு முறையாக பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் மற்றும்  அலுவலர்களுடன் கலந்தாலோ சனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை, வேளாண்  பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை அலுவலர்கள், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை, நீர்வளத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.   விவசாயிகளின் கருத்துகள் குறித்து அரசின் கவனத்திற்கு தெரிவித்து உரிய தொடர் நடவ டிக்கைகள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும் என மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்தார். பின்னர் ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை களிலிருந்து ஒரே நேரத்தில், அதி களவு வெள்ள நீர் வெளியேற்றப் படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினா டிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல்  இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி வரும்  நிலையில், அணைக்கு வரும் நீர்  முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து  விடப்பட வாய்ப்பு உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண் டும்.  காவிரி நீர் பாய்ந்து வரும்  கால்வாய்கள், ஆறுகள் மற்றும்  நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் ஈடுபடக் கூடாது.  காவிரி ஆற்றில் திறந்து விடப் படும் தண்ணீரின் அளவைப் பற்றி  உடனுக்குடன் அரசின் அறிவிப்பு கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.  தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதிகளுக்கு குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற் றோர்கள் தங்களது குழந்தை களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது  கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.  பாலங்களைத் தவிர, ஆறு களை கடந்து செல்லும் இதர பாதைகள் ஏதுமிருப்பின் அது தொடர்பான செய்திகளை பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப் பினர் தெரிவிக்க வேண்டும்.  பொது மக்களுக்கு அச்சம் ஏற்படாதவாறு கவனமாக செயல்பட்டு, அபாயம் உள்ள இடங்களில் வசிக்கக் கூடிய மக்கள் இருந்தால், அவர்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும். பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.  காவிரி கரையோரம் மற்றும்  தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் மேற்கொள்ளு மாறு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.