ஆனைக்கொம்பன் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
தஞ்சாவூர், டிச.10 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சன்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 5,800 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக நெற்பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த கொசுவானது பழுப்பு நிறமாக காணப்படும். நடவு செய்து 40 முதல் 45 நாட்களில் இப்பொழுது தாக்குதல் அதிகமாக காணப்படும். பாதிக்கப்பட்ட பயிரின் இலை வெங்காயத்தாள் போல் சுருண்டு, பாதிக்கப்பட்ட தூர்கள் யானை தந்தம் போன்று காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு தயோமி தாக்சோம் 25 சதவீதம் WG 400 மி.லி அல்லது பிப்ரோ னில் 5 சதவீதம் SC 250 மி.லி யை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அம்மாபட்டினத்தில் புதிய ஆம்புலன்ஸ் தொடக்கம்
அறந்தாங்கி,டிச.10- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குறைந்த கட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஆக்சிஜன் வசதியுடன் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவையை பெற 7278888108 என்ற எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோ னா காலத்திலிருந்து இன்று வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ உதவிகளும், வாழ்வா தார உதவிகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அம்மாபட்டினத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆம்பு லன்ஸ் சேவையை போன்று புதுக்கோட்டை மாவட்டத் தில் கோபாலப்பட்டினம், வடக்கம்மாபட்டினம், அறந் தாங்கி, புதுக்கோட்டை, முக்கண்ணாமலைப்பட்டி போன்ற ஊர்களிலும் ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.