புதுக்கோட்டை, செப்.28 - 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், மருத்து வம், பொறியியல், சட்டம் மற்றும் பொது வான படிப்புகளுக்கு தேர்வு பெற்ற மாணாக் கர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில், 42 மாணாக் கர்கள் மருத்துவப் படிப்பிற்கும், 2 மாணாக் கர்கள் சட்டப் படிப்பிற்கும், ஒரு மாணவர் பொறியியல் படிப்பிற்கும் மற்றும் ஒரு மாணவி பொது படிப்பிற்கும் என மொத்தம் 46 மாணாக்கர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட் டின் கீழ் உயர்கல்விகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத் தில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இரட்டை இலக்க எண்ணாக உள்ள சாதனை, அடுத்த ஆண்டு மூன்று இலக்க எண்ணாக அதிகரிக்க வேண்டும். மேலும் பல்வேறு சூழ்நிலைக்களுக் கிடையே 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பிடித்த மாணாக்கர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சேவையாற்ற வாழ்த்து கிறேன்” என்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.