புதுக்கோட்டை, ஆக.12 -
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண் டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதனொரு பகுதியாக திருமயம் கோட்டைத் தெருவில் செயல்பட்டுவரும் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியினை பார்வையிட்டு, விடுதியில் செயல்பட்டுவரும் நூலகம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும், உணவு அட்டவணையின்படி உணவு வகைகள் மாணவி களுக்கு வழங்கப்படுவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற் கொண்டார்.