districts

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் அடாவடி போலீசார் முன்பு தாக்குதல் நீதிமன்ற ஊழியர் புகார்

பெரம்பலூர், ஜூன் 7-                                      

      நில உரிமை தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப் பின் அடிப்படையில் நில  மீட்பில் ஈடுபட்டபோது ஆக்கி ரமிப்பாளர்கள் அராஜ கத்தில் ஈடுபட்டனர். நில  உரிமை பெற்றவர் தாக்கப் பட்டார். இதுகுறித்து, நீதி மன்ற கட்டளை பணியாளர் அளித்த புகாரின் பேரில் குன்  னம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட் டரை கிராமத்தை சந்தவர் சி. ராஜமாணிக்கம். இவர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரி டம் இருந்து ஒரு ஏக்கர் 14  செண்ட் நிலத்தை வாங்குவ தாக 2002-ஆம் ஆண்டு கிரய ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதி யில் கிரயம் செய்து கொடுக் காமலும், நில உரிமையை விட்டுத்தர மறுத்தும் ஏமாற் றப்பட்டுள்ளார்.  

   இது தொடர்பான வழக் கில் அரியலூர் நீதிமன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் நிலத்தை கிரயம்  செய்து தர பரமசிவத்துக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. பெரம்பலூர் மாவட்ட  நீதிமன்றமும், பின்னர்  சென்னை உயர்நீதிமன்ற மும் தீர்ப்பை உறுதி செய்  தன. உயர்நீதிமன்ற உத்தர வில், ராஜமாணிக்கத்துக்கு நீதிமன்றம் மூலம் கிரயம்  செய்து நிலத்தை சுவாதீனம்  செய்ய 2023 ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் 3 அன்று நீதிமன்ற உத்தர வின் படி, நீதிமன்றப் பணியா ளர்கள் மற்றும் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர்  தலைமையில் காவல்துறை யினருடன் கோவில்பாளை யம் கிராம நிர்வாக அலுவ லர் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவை செய்ய முற்பட்டனர்.  

     அப்போது பரமசிவம் மற்றும் அவரது மகன்கள் தமிழ்வாணன், தர்மராஜ், மனைவி பவுனம்மாள் உற வினராகிய திமுக கவுன்சிலர் கருணாநிதி உள்ளிட்ட  சிலர் காவல்துறையினர் முன்னிலையிலேயே ராஜ மாணிக்கத்தை தாக்கியுள்ள னர். தகராறில் ஈடுபட்டு நீதி மன்றப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நீதிமன்ற முதுநிலை கட்டளை பணி யாளர் சதீஸ்குமார், குன் னம் காவல் ஆய்வாளரிடம் அளித்த புகாரின் பேரில், நீதி மன்ற உத்தரவை அவ மதித்த பரமசிவம், தர்ம ராஜ், திமுக கவுன்சிலர் கரு ணாநிதி மற்றும் பவுனம்மாள் உள்பட தகராறில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.