தஞ்சாவூர், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி பேரா சிரியர் சுகுமாரனின் துணை வியார் இந்திரா சுகுமாரன் முதலாம் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, பூத லூர் ஒன்றியம் வெண்டை யம்பட்டியில் கவின்மிகு தஞ்சை இயக்கம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணி திட்டம், தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் மற்றும் வெண்டயம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அடர் வனம் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கவின் மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் மருத் துவர் ராதிகா மைக்கேல் தலைமையில், திருவை யாறு சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரன், இந்திரா சுகுமாரன் படத் திற்கு மலரஞ்சலி செலுத்தி முதல் மரக்கன்றை நட்டார். பூதலூர் ஒன்றிய பெருந்த லைவர் கல்லணை செல்லக் கண்ணு, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன், திமுக ஒன்றியச் செய லாளர் முருகானந்தம், ஊராட்சிமன்றத் தலைவர் கனிமொழி சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் பாஸ்கர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ஜான் பீட்டர், விஞ்ஞானி ஸ்ரீநாத், மாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா, கவின் மிகு தஞ்சை இயக்க செய லாளர் அப்துல் லத்தீப், வழக்கறிஞர் ஜீவகுமார், மாதர் சங்க மாநிலச் செய லாளர் தமிழ்ச்செல்வி உள் ளிட்ட பலர் மரக்கன்றுகளை நட்டனர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்து, ஸ்ரீதர் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இதில் கல்வி யாளர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தினர் திரளாக பங்கேற்றனர்.