பொன்னமராவதி,பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில்,ஸ்ரீ பொன்னன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஏழு சாமியாடிகள் மற்றும் (தலித்)குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொன்ன மராவதி இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளரை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொன்னமராவதி இந்து சமய அறநிலையதுறை ஆய்வாளர் அலு வலகத்தை முற்றுகையிடும் போராட் டம் பிப்ரவரி 22 வியாழக்கிழமை அன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் புதன்கிழமையன்று பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா முன்னிலையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதில் ஏழு சாமியாடிகள் மற்றும் (தலித்) குடும்பர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் எதிர்வரும் திருவிழா காலங்களில் புதுக் கோட்டை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரிடம் முறையாக மனு செய்து கொட்டகை அமைத்து அன்னதானம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி,மாவட்ட செய லாளர் ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ராசு, மணி, முரு கேசன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.