districts

img

ஒரத்தநாடு டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,  ஜூலை 19 -

     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மதுக்கடையை மூட வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

     இந்த போராட்டத்தில், ஒரத்தநாடு வட்டாட்சியர், டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில், ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  

   இதனைக் கண்டித்தும், அத்துமீறி நடந்து கொண்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டியில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

  பூதலூர் வடக்கு ஒன்றியம், திருக்காட்டுப்பள்ளியில், மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவையாறு பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கும்பகோணம்

      கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திருசேறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தருமையன், ரங்கசாமி, ஆனந்த், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பிரேமநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.