districts

பெரம்பலூர் அருகே விபத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி

பெரம்பலூர், ஜூன் 5-

     பெரம்பலூர் அருகே திருச்சிராப்பள்ளி-சென்னை நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காய மடைந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் கற்பகம் மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    திருவண்ணாமலையில் இருந்து திண்டுக் கல்லுக்கு திங்களன்று அதிகாலை வேனில் 10 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன், முன்னாடி சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது டிராக்டர் வேன் மீது மோதியது. இதில் வேன் சாலைத்தடுப்பில் மோதி  நின்றது. டிராக்டர் சாலையின் இடதுபுறம்  கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் ‘108’ ஆம்புலன்ஸூக்கு தகவல் அனுப்ப, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.  

    அப்போது சென்னையிலிருந்து திருச்சிராப் பள்ளி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சாலைத்தடுப்பில் மோதி பின்னர் ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன், வேனில் பயணம் செய்த குப்பு சாமி, இவரது பேத்தி கவிப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம டைந்தவர்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன்  (42), நீலா (65), கிழவன் (45), இராமநாத புரத்தை சேர்ந்த சாமிதாஸ் (40), சேகர் (40) ஆகி யோர் காயமடைந்தனர்.