districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி விபத்து

அரியலூர், அக்.24 - அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் ஊராட்சி  ஒன்றிய அலுவலக மேலா ளர் செந்தில்குமார், தனது காரை தா.பழூர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, கடைவீதிக்கு பொருட் கள் வாங்கச் சென்றுள் ளார். அப்போது 4 சிறு வர்கள் ஓட்டி வந்த கார், இவரது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து மேலாளர் செந்தில்குமார் ஜெயங் கொண்டம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் மணி கண்டன் சம்பவ இடத் திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத் தினார். விபத்து காரண மானவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர். 

நூலக விழிப்புணர்வு

பொன்னமராவதி, அக்.24 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம் பூரில் நூலக வாசகர் வட்டம் சார்பாக நூலக விழிப்புணர்வு விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரி யர் பொ.கேசவன் தலைமை வகித்தார். நூலகர் ரதிஸ்ரீ வரவேற் றார். கவிஞரும் வாசகர் வட்டத் தலைவருமான மு.கருணாநிதி உரை யாற்றினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணி, ஒன்றியக் குழு  உறுப்பினர் பழனிச்சாமி, முத்தமிழ்ப் பாசறை அறங் காவலர் ராஜமுகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கி,  ‘நூல்பல கல்’ எனும்  தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி னார். முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் குழு செயலாளர் நெ.இரா.சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஓய்வுபெற்ற தலைமை யாசிரியர் சு.பழனிசாமி நன்றி கூறினார்.

துவக்க விழா

அரியலூர், அக்.24- அரியலூர் மாவட்டத் தில் பள்ளி சீருடை தைக் கும் மகளிர் தையல் தொழிலாளர் நலச்சங்கம் துவக்க விழா மாவட்டத்  தலைவர் இந்திரா தலை மையில் நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.கிருஷ்ணன், சார்ப் டிரஸ்ட் நிறுவனர் மேனேஜிங் டிரஸ்டி கருப்புசாமி, மு.பா.சமூக அறக்கட்டளை நிறு வனர் மு.க கணேசன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்ட பொருளாளர் பார்வதி நன்றி கூறினார்.

உணவு விழிப்புணர்வு

பாபநாசம், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் விவேகா னந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் உணவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சங்கச் செயலர் கண்ணதாசன் தலைமை வகித்தார். பொருளாளர் உஷா ராணி முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், உண வின் முக்கியத்துவம், சரி யான ஊட்டச்சத்து, உணவை வீணடிக்க கூடாது, உணவு தேவையை  பூர்த்தி செய்ய சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசி யம், குடிநீர் பாதுகாப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை

கும்பகோணம், அக்.24-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் பன் னாட்டு பள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, மேல் நிலைப்பள்ளி என கல்விச் சேவையில் முன்னுதாரணமாக இயங்கி வருகிறது. இப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு தனித்திறன், கல்வியில் முதலிடம் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  இந்நிலையில், செவ்வாயன்று விஜய தசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளைப் பிடித்து எழுத வைத்தனர். நிகழ்ச்சியை கார்த்தி வித்யாலயா மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி தாளாளர் கார்த்தி கேயன் துவக்கி வைத்தார். கார்த்தி வித்யா லயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா  கார்த்திகேயன் குழந்தைகளின் கல்வி சிறப்பான முறையில் அமைய வாழ்த்து தெரி வித்தார்.

தனி அறையில் போலீசார் மாணவர்களை தாக்கியதாக புகார் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சை ஆட்சியருக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர், அக்.24 - தனி அறையில் வைத்து காவல்துறை யினரால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந் தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரிய ராக சரண்யா என்பவர் பணியாற்றி வரு கிறார். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி, பள்ளி  மைதானத்தில் நடந்து வரும்போது, சரண்யா வின் தலையில் கல் விழுந்ததில் காயம டைந்தார். மாணவர்களில் யாரோ ஒருவர்தான்  தன் மீது கல்வீசியதாக கூறி, வல்லம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.  மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் தனது கணவரிடம் சரண்யா தெரிவித்து உள்ளார்.   இதையடுத்து சீருடை அணியாமல் வந்த காவல்துறையினர், சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு, அவர்களை தனி  அறையில் வைத்து அடித்ததாகவும், இதை  யாரிடமாவது சொன்னால், செய்முறை தேர் வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவ தாகவும் பள்ளி தரப்பில் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் பள்ளியை முற்றுகை யிட்டனர்.  அப்போது, ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பிரமுகர்கள் சிலர் தலை யிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர் களை சமாதானம் செய்தனர். இவ்விவகாரத்தில், 15 காவல்துறை யினர் பள்ளியில் புகுந்து, 14 மாணவர் களை கணினி ஆய்வக அறையில் வைத்து,  தண்ணீர்கூட கொடுக்காமல் தாக்கியுள்ளனர் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், ஒரு வாரத்திற்குள் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என ஆட்சியர்  தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விசா ரணை நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில்  கூறப்பட்டுள்ளது.

தரங்கை  தெரசா பள்ளியில்  நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

மயிலாடுதுறை, அக்.24 - மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தெரசா பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமை துவங் கியது. அக்.27 வரை நடை பெறவுள்ள இம்முகாமில் தெரசா பள்ளியின் நாட்டு  நலப்பணித் திட்ட மாணவி கள் ஏராளமானோர் பங்கேற் றுள்ளனர். தரங்கம்பாடி இராணி வீதியில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அம் பிகாபதி தலைமை வகித் தார். மாவட்டக் கல்வி அலுவ லர் பா.ஞானசங்கர், தரங்கம் பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, பள்ளி தலை மையாசிரியை அருட்சகோ தரி செசிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியரும், மக்கள் தொடர்பு அலுவலருமான என்.ரவி, பேரூராட்சி துணைத்  தலைவர் பொன்.ராஜேந் திரன், ஆசிரியைகள், நாட்டு நலப் பணித்திட்ட உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் சிறப்பித்தனர்.

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது! ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்

பாபநாசம், அக்.24- அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நாச கர ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவிடா மல் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில், “அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ  கார்பன் கிணறுகளுக்கும், கடலூர் மாவட் டத்தில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும்  ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரியது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த விபரத்தை அமைச்சர் தங்கம்  தென்னரசு சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.  தமிழ்நாடு அரசால் அனுமதி மறுக்கப்பட்ட  ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எப்படியா வது நிறுவ வேண்டும் என்கிற முயற்சியை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.   தற்போது, ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர்  மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு களை அமைப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு, தில்லி யில் உள்ள ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம்  அனுமதி பெற்று இருக்கிறது.  தமிழ்நாடு அரசு மறுத்துவிட்ட நிலையில்,  ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது ஏற்பு டையது அல்ல. மக்கள் நலனைவிட கார்ப்பரேட் டுகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பாக  இருக்கிறது  ஒன்றிய பாஜக அரசு. அரியலூர்,  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், மாநில அரசும் இந்த நாசகர ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை இப்பகுதியில் வர விடாமல் தடுக்க  வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என  கூறப்பட்டுள்ளது.

திருச்சி காந்திபுரத்தில்  வாடகை வீட்டில் குடியிருப்போர் அமைப்பு துவக்கம்

திருச்சிராப்பள்ளி, அக்.24 - திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஸ்லிம் தெரு, காவேரிநகர், மாரியம்மன் கோவில், பாண்ட மங்களம், புத்தூர், வண்ணாரப்பேட்டை, தென்னூர் பகுதி களில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில்  குடியிருந்து வரும் சொந்த வீடில்லாத 392 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக் அஹமது  தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாக தில்லைநகர் காந்தி புரத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் அமைப்பு துவக்கப் பட்டது. இதற்கான கூட்டத்திற்கு அப்துல்கயூம் தலைமை வகித்தார்.  வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பெறுவ தற்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெற்று வரும் பணி கள் குறித்து மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பகுதிச் செயலா ளர் ரபீக்அஹமது ஆகியோர் பேசினர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்கப் பெறா தவர்கள் மேல்முறையீடு செய்வது. அனைவரும் கலைஞர்  காப்பீடு அட்டை பெற விண்ணப்பிப்பது என தீர்மானிக்கப் பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அக்.28 பட்டுக்கோட்டையில்  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், அக்.24 -  டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா அக்.28 (சனிக்கிழமை) அன்று பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களான மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமிற்கு வரும் வேலை நாடுநர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10, 12 ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்கலாம். தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை (நகல்), சுயவிபரக் குறிப்பு நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விபரம் அறிந்து கொள்ளவும், பதிவு செய்துகொள்ளவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலக அரங்கும் அமைக்கப்படவுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளில், இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு பதியவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

பருவமழை காலம்: மின் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மன்னார்குடி, அக்.24 - வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலை யில் பொதுமக்கள் மின் சாதனங்களை கையாளு வதில் பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டு மென, திருவாரூர் மின் பகிர்மான வட்டம், மன்னார்குடி நகர உபகோட்டத்தின் சார்பில் எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நகர உதவி செயற்பொறி யாளர் முனைவர் சா.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மழை நேரத்தில் பொது மக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. பள்ளி  குழந்தைகளை தொட அனுமதிக்கக் கூடாது.  மின் கம்பிகள் அறுந்து கிடந்ததால் அருகில்  உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தர வேண்டும். மின் பாதைக்கு அருகில்  உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழி யரின் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும்.  தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும்  நடப்பதையும், குழந்தைகளை விளையாடவும் விடக்கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது. மின் மாற்றிகள், மின்  பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின்  கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக் கூடாது. வீடுகளில் மின்  கசிவு இல்லாத வகையில் வயரிங்கை பராமரிக்க  வேண்டும்.   வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் ஆபத்தை  தடுக்க இ.எல்.சி.பி. சாதனம் பொருத்தப்பட வேண்டும். வீட்டில் உள்ள மின் சாதனத்தில், மின்  அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மெயின் சுவிட்ச்சை  அணைக்க வேண்டும். மெயின் சுவிட்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது பார்க்க கூடாது.  இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக் கூடாது.  மின் பாதைக்கு கீழே போர்வெல் போடக்கூடாது.  லாரி, டிப்பர், ஜேசிபி, கிரேன் ஆகியவற்றை பயன் படுத்தக் கூடாது. இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின் சாத னங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.     கட்டிடங்களுக்கும் மின் பாதைக்கும் இடை யில் போதிய இடைவெளி இருக்குமாறு கட்டிடங் களை அமைக்க வேண்டும். இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் மாலைகளை மின் பாதை களில் வீசக்கூடாது. மின் வாரிய கம்பங்களில் கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் கட்டக்  கூடாது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன்  இருந்து மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இ-பட்டா எப்போது வழங்கப்படும்?
நவ.16-இல் கரூரில் காத்திருப்புப் போராட்டம்

கரூர், அக்.24 - இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த மக்களுக்கு இ-பட்டா வழங்காமல், மக்களை ஏமாற்றும் நோக்கில்  செயல்படும் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்து வதாக கட்டுமானச் சங்கம் அறிவித்துள்ளது.  கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க பவித்திரம் கிளை கூட்டம் பொருளாளர் ஏ.சகுந்தலா தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணி‌யன் பேசினார். சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன் மற்றும் கிளை உறுப்பி னர்கள் பலர் கலந்துகொண்டனர்.  இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த பவித்திரம் பகுதி மக்கள் அனைவருக்கும் சர்வே நம்பர், வீட்டு மனை எண் குறித்து பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தும், இ-பட்டா கொடுக்கவில்லை. இ-பட்டா தரு வதாகச் சொல்லி தொடர்ந்து மக்களை ஏமாற் றும் நோக்கத்துடன் செயல்படும் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 16 (வியாழக்கிழமை) அன்று புகளூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட் டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.