districts

img

மதுக்கூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜன. 18 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையை அடுத்த வடக்கு மதுக்கூர் கிராமத்தில்  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்  அமைந்துள்ளது. மதுக்கூர், பெரியகோட்டை,  மோகூர், வடக்கு மதுக்கூர் உள்ளிட்ட அருகே  உள்ள கிராமங்களில், விளைந்த நெல்லை இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் தான்  விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், நெல் கொள்முதல் நிலை யத்தில் முறைகேடு நடப்பதாக கூறி, திங்கள் கிழமை திடீரென விவசாயிகள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதனால் மதுக்கூர், மன்னார்குடி, கும்பகோணம் வழித்தடத்தில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.  தகவலறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் கணேஷ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து விவ சாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால்  ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.  இது தொடர்பாக வடக்கு மதுக்கூர் விவசாயி  ஹரிஹரன் கூறுகையில், “மதுக்கூர் விவசாயி கள் அனைவரும் வழக்கமாக வடக்கு மதுக்கூரில் உள்ள நெல் கொள்முதல் நிலை யத்தில்தான் நெல்லை எடை போட்டுக் கொடுத்து  பணம் வாங்குவோம். இந்த கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 30 ரூபாய்  கமிஷன் கேட்கிறார்கள். மேலும் அதிகமான  மூட்டை கொண்டு வரும் பெரும் விவசாயி களுக்கு மட்டுமே எடை போட்டு பணம் கொடுக் ்கிறார்கள். சிறு விவசாயிகள் நெல் கொண்டு  வந்தால் கண்டு கொள்வதில்லை.  மேலும், இரவு நேரத்தில் காவலர்கள் இல்லாததால் நெல் மூட்டைகள் திருடு போ கிற சூழ்நிலை இருக்கிறது. இவற்றையெல் லாம் பலமுறை கேட்டும் எங்களுக்கு எந்தவித மான நியாயம் கிடைக்காததால் சாலை மறி யல் செய்தோம். பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு  வேண்டிய உதவிகளை செய்து தருவதாக ஒப்புதல் அளித்த பிறகு மறியலை நாங்கள் கை விட்டோம்” என்றார்.