districts

img

அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.30 - தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியா பாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடை யாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடை  நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு தரைக்கடை, தள்ளுவண்டி வியா பாரிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவல கம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.  போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட நிர்வா கிகள் புஷ்பாகரன், அப்துல்லா, மணி கண்டன், சேட் மைதீன், சுரேஷ், கோவிந்தன்,  பசுபதிராஜ் உள்ளிட்ட தரைக்கடை தள்ளு வண்டி வியாபாரிகள் மாநகராட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்திய பின் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து திருச்சி மாவட்ட தள்ளு வண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியா பாரிகள் சங்கத்தின் சிஐடியு மாவட்ட தலைவர்  கணேசன் கூறுகையில், தரைக் கடை வைத்தி ருக்கும் வியாபாரிகளை நடைபாதை என்ற  காரணத்தைக் கூறி அப்புறப்படுத்து கிறார்கள். வியாபாரிகளிடம் அரசு வழங்கிய  அடையாள அட்டை உள்ளது. வியாபாரி களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளா விட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.