தஞ்சாவூர், செப்.21 - தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு வட்டத் தலைவர் டி.ஆர்.சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். வட்ட இடைச் செயலாளர் எம்.சிபி சக்கரவர்த்தி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். வட்டத் துணைத் தலைவர் டி.ராகவேந்திரமூர்த்தி பிரவீன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் (பொ) பி.முருகன் துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் ஏ.தமிழ்மாறன் மற்றும் வட்டப் பொருளாளர் சவுரி நாயகம் ஆகியோர் அறிக்கையை வாசித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் க.பாலபாரதி கருத்துரை ஆற்றினார். அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக ரத்து செய்து வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அந்தந்த துறை தலைவரின்கீழ் மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். மாவட்டம் தோறும் பணியமர்த்தப்படும் பெண் அரசு ஊழியர்களுக்கு பெண்கள் விடுதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.