districts

img

இன்சூரன்ஸ், எப்.சி கட்டண உயர்வை கைவிடுக

ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.29-

   திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க 5-ஆம் ஆண்டு பேரவை கூட்டம் சனிக்கிழமை அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.

   கூட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நவமணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி வரவேற்றார். ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில துணைத்தலைவர் தெய்வராஜ் நிறைவுரையாற்றினார். மணிவண்ணன் நன்றி கூறினார்.  

  சிஐடியு புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத், மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

  கூட்டத்தில், மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ், எப்சி கட்டண உயர்வை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பேரவையில், மாவட்டத் தலைவராக கே.நவமணி, மாவட்டச் செயலாளராக பி.சந்திரசேகர், மாவட்டப் பொருளாளராக எஸ்.சம்பத் உள்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.