திருச்சிராப்பள்ளி, டிச.1- மின்வாரியத்தில் தமிழக அரசு அவுட்சோர்சிங் முறை யில் தனியார் மயத்தை புகுத் தும் நடவடிக்கையை கை விட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வியாழனன்று திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறி யாளர் அலுவலகம் முன்பு பட்டை - நாமம் போஸ்டர்களு டன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐ டியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் தலை மை வகித்தார். வட்ட செயலா ளர் செல்வராஜ், வட்ட தலை வர் நடராஜன், வட்ட பொரு ளாளர் பழனியாண்டி, நகர கோட்ட செயலாளர் ராதா, நகர கோட்ட தலைவர் ஜான் பாஸ்கோ ரவி, நகர கோட்ட துணைத் தலைவர் சீனி வாசன் ஆகியோர் பேசினர். ஐக்கிய சங்க பொறுப்பாளர் நெல்சன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மின்வாரிய ஊழியர் களின் கோரிக்கைகளை தமி ழக அரசு மற்றும் மின் வாரி யம் நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 5-ஆம் தேதி அனைத்து சங்கங்களையும் ஒருங்கி ணைத்து வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அரசுக்கு எச்ச ரிக்கை விடுத்தனர்.