மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட ஆணைக்காரன்சத்திரம், கூத்தியம்பேட்டை, திருமயிலாடி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) ரமேஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.