மயிலாடுதுறை, நவ.11- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே யுள்ள எருக்கட்டாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளம் தொழிலதிபர் சந்துரு. இவருடைய நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் தீபாவளி பரிசளித்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஊழியர்கள் அனைவரையும் அழைத்து, அவர் களுக்கு பரிவட்டம் கட்டி அவர்களுக்கு, மலர்மாலை, 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணி வித்து புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை தீபாவளி பரிசாக அளித்தார். இவ ரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரி வித்து வருகின்றனர். மேலும் 50 ஏழை-எளிய குடும்பங்களுக்கு ரொக்கப்பணம், அரிசி, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.