மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை, ஏப்.17- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்த மான சட்டைநாதர் கோயிலின் கும்பாபி ஷேகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதையொட்டி விழாவிற்கான யாக சாலை அமைப்பதற்காக மண்எடுக்க மேற்கு கோபுர வாயில் கோயில் உட்புறத் தில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஞாயி றன்று குழிதோண்டப்பட்டபோது,
அப்போது சுமார் 2 அடியில் புதைந்தி ருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ் கந்தர், அம்பாள், பூர்ண-புஷ்கலா அய்ய னார், திரு ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுதவிர திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற 462 தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகி யுள்ளது.
தகவலறிந்த தருமபுர ஆதீனம் நேரில் பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி, அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை மண்டல ஆலோச கர்கள் மதிவாணன், பிரனன், சீர்காழி கோட்டாச்சியர் அர்ச்சனா, வட்டாச்சியர் செந்தில்குமார், இந்து அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.