மயிலாடுதுறை, டிச.22 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி யில் கால் அழுகல் நோயால் பாதிக்கப் பட்ட பள்ளி மாணவி ஒருவர் தனது உயிரை காப்பாற்ற, தமிழக அரசு உதவ வேண்டுமென கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரில் வசிப்பவர் கனிமொழி. இவரது கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மகளான அபிநயா (14) சீர்காழி யில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு காலில் எஸ்இஎல் (SEL) என்ற அரிய வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவ ரது இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரி வித்ததாக கூறப்படுகிறது. ஏழை குடும் பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, மருத்துவ செலவு செய்ய முடியாமல் தற்போது உயிருக்கு போராடி வரும் நிலையில், தன்னை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள் ளார்.