தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, 232 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கினார். பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவி பூங்குழலி, பள்ளி தலைமையாசிரியர் நீலா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.