districts

img

ஆண்டிபட்டி அருகே வினோத திருவிழா துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் பக்தர்கள்

தேனி, மே 3-

   தேனி மாவட்டம், ஆண்டி பட்டி ஒன்றியம், மறவபட்டி யில் கோவில் திருவிழாவில் சாக்கடையில் நனைத்த துடைப்பத்தை கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிகழ்வு  நடை பெற்றது.‌

   மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று  வருகிறது. விழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக் கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.  அந்த கிராமத்தில் உள்ள  மக்கள் தங்களின் மாமன்,  மைத்துனர்களை துடைப் பத்தால் அடித்துக் கொள் ளும் வினோத நிகழ்ச்சி நடை பெற்றது. அடிப்பதற்கு முன்  பாக துடைப்பத்தை சாக்  கடை நீரிலும், சேறு மற்றும்  சகதியில் நனைத்துக் கொண்டு மாமன், மைத்து னர்கள் மீது ஒருவருக்கு ஒரு வர் அடித்துக்கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சக தியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிக் கொண்டனர். இந்த வினோதமான திருவிழா வை சுற்றுவட்டார கிராமங் களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தனர்.