பெ.சண்முகம் பங்கேற்பு
மயிலாடுதுறை, ஏப்.20-
தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமை வகித் தார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் காபிரியேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன் மற்றும் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.