districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று தஞ்சையில் சீர்மரபினர் நலவாரிய சிறப்பு முகாம்

தஞ்சாவூர், அக்.23 -  சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற  உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18  வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு  சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உட லுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோர்) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப் பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய் தோர் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து  கொள்ளவும், புதுப்பித்தல் தவ றிய உறுப்பினர்களை மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினர் சேர்க்கையினை அதிகப் படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக அக்.24 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட  அரங்கில் நடக்கவுள்ளது என ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில்  இன்று மின் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், அக்.23- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அக்.24 (வியாழக்கிழமை) மாதாந்திர மின்வாரிய பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை மின்வாரிய செயற்பொ றியாளர் ஜ.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் எம்.நளினி தலைமையில், பட்டுக்கோட்டை  கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.24 (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது.  எனவே பட்டுக் கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் இதில் கலந்துகொண்டு, மின்துறை தொடர்பான தங்கள் குறைகளை கூறி தீர்வு பெறலாம்” என கூறப் பட்டுள்ளது. 

சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம் 

பெரம்பலூர், அக்.23 - குன்னம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில்  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. முகாமிற்கு தலைமையேற்று பேசிய வட்ட சட்ட  பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமாகிய எஸ். கவிதா சட்ட உதவி குறித்து பேசுகையில், “தங்களுக்கு ஏதேனும் சட்டங்கள் குறித்து குறைகள் இருப்பின் சட்ட உதவி மையத்தை நாடலாம். மேலும் இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம். ஏழை, எளிய மக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இலவச சட்ட உதவி மையத்தை நாடலாம்” என்றார். முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி வரவேற்றார். இம்முகாமில் வழக்கறிஞர்கள் இனியவன், அசோக்குமார், சத்தியமூர்த்தி, பகுத்தறிவாளன், இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஓய்வுபெற்ற கண்கா ணிப்பாளர்  வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

தஞ்சை பெரிய கோயிலில் ரூ.48.77 லட்சம் காணிக்கை

தஞ்சாவூர், அக்.23 -  தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள உண்டியல்களில் பக்தர்கள் ரூ.48.77 லட்சம் காணிக்கை செலுத்தியிருப்பது செவ்வாயன்று தெரிய வந்தது. இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன.  இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டி யல்கள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் செவ்வாயன்று திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஈடுபட்டனர்.  இதன்மூலம் பக்தர்கள் ரூ.48,77,462 ரொக்கமும், 35  கிராம் தங்கமும், 302 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

கார்த்தி வித்யாலயாவில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

கும்பகோணம், அக்.23 - கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு விபத்தில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் இணைந்து ‘விபத்தின்மையே முழு பாதுகாப்பு; விபத்து இல்லா தீபாவளி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பள்ளி மாணவ-மாணவியர் முன்னிலையில் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி கே.பாலசுப்பிரமணியன், தீபாவளி பண்டிகை அன்று வெடி வெடிக்கையில், பெரியவர்கள் முன்னிலையிலும் பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டும் வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக தீ ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்றும் செயல் விளக்கம் அளித்தனர். தீபாவளி பண்டிகையின் போது மிருகங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், அதிக சத்தம் உள்ள வெடிகளை வெடிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அனைவரும், “பெரியவர்கள் முன்னிலையில் மட்டுமே வெடியை உபயோகிப்போம்; தங்கள் அருகில் உள்ள மற்றவர்களுக்கும் இவ்வழிமுறையை எடுத்துரைப்போம்” என்று உறுதிமொழி எடுத்தனர். தீயணைப்பு துறை சார்ந்த பல்வேறு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளி தலைவர் கார்த்திகேயன், பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், தீயணைப்புத் துறை வீரர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், அக்.23 - திருவாரூரில் நகராட்சி தூய்மைப் பணி  ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்  துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பாக புதன்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம், தீபாவளி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சாலை மறியல் போராட்டம் புதன் கிழமை நடைபெறும் என நகராட்சி தூய்மைப் பணி ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் (சிஐடியு) சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில், நகரமன்றத் தலைவர் எஸ். புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணை யர் என்.தாமோதரன் முன்னிலையில் செவ்வாயன்று சமாதானக் கூட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.கே.என்.அனிபா, மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி, நகராட்சி சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், சங்க செய லாளர் எஸ்.ராஜேஷ் ஆகியோர் பங்கேற்ற னர். பேச்சுவார்த்தையில், ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.440 பெற்று வந்த நிலையில், அக்டோபர் மாதம் முதல், நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.500, தீபாவளி முன்பணம் ரூ.5,000, ஊக்கத்தொகை ரூ.2000 வழங்குவ தாகவும், மற்ற கோரிக்கைகளை ஒருமாத காலத்தில் நிறைவேற்றி தருவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை நடைபெற விருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது.