பிஷப்பிடம் மக்கள் முறையீடு ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.12- மதுரை உயர் மறை மாவட்ட பங்கின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. ரைட்டன்பட்டி பகுதியில் இறந்த வர்களை சீனியாபுரம் பகுதியில் அமைந் துள்ள மயானத்தில் புதைப்பது வழக்கம். இந்நிலையில் ரைட்டன்பட்டி பகுதிக்கு தனி யாக கல்லறை கேட்டு தொடர்ந்து மதுரை மாவட்ட அதிபருக்கு மனு கொடுத்து வந் துள்ளனர். ஆனால் இன்றுவரை தனி கல் லறை ஒதுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் கடை சியாக இறந்தவரை சீனியாபுரம் கல்லறை யில் புதைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரைட்டன்பட்டி பகுதி மக்கள் பேருந்து மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை, வருவாய்த்துறையினர் தலையிட்ட தன் பேரில் கலைந்து சென்றனர். இந்நிலையில் திங்களன்று மதுரை உயர்மறை மாவட்ட பிஷப் பொறுப்பில் உள்ள அந்தோணிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தந்தார். தகவலறிந்த சீனியாபுரம் பகுதி மக்கள், பிஷப்பை நேரில் சந்தித்து ரைட்டன்பட்டி பகுதிக்கு தனியாக கல்லறை கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர். இறுதியில் ஆறு மாத காலத்திற்குள் ரைட்டன்பட்டி பகுதிக்கு தனி கல்லறை கட்ட இடம் ஒதுக்கித் தருவதாக பிஷப் உறுதி அளித்ததின் பேரில், மக்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில் பங்குத் தந்தை சந்தன சகாயம், சீனியாபுரம் நாட் டாமை அமல்ராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.