districts

img

மக்கள் பயன்படுத்த முடியாத சாலை மண் சாலை அமைத்து கொடுத்த சிபிஎம் குடும்பத்தினர்

பொன்னமராவதி, மே 20-

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் திருக்களம்பூர் ஊராட்சி பகுதி யில் 20 அடி அகலம் 500 மீட்டர் நீளமுள்ள நாசு வன்களம்-வாடதிப்பட்டி இணைப்பு  சாலையை இரு குடும்பத்தினர் இணைந்து  ரூ.35 ஆயிரம் செலவில் கிரஷர் மண் சாலை யாக புதிதாக அமைத்துள்ளனர்.  

    சுமார் 20 ஆண்டுகளாக இச்சாலையை  அமைத்து தர வேண்டும் என ஊராட்சி மற்றும்  ஒன்றிய நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை சாலை  அமைத்து தரவில்லை.

    இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப.சாத்தையா, சிபிஎம் ஒன்றியக்  குழு உறுப்பினர் வி.ஆர்.எம்.சாத்தையா ஆகி யோரின் குடும்பத்தினர் இணைந்து இந்த சாலையை தங்களது சொந்த நிதியில் கிரஷர்  மண் சாலையாக அமைத்துள்ளனர்