திருவாரூர், செப்.29 - தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பி வடத்தை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கண்டிரமாணிக்கம் ஆதி திராவிட காலனி பகுதியில் சுமார் 36 வீடுகள் உள்ளன. இவ்வீடுகளுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பி வடம் மிகத் தாழ்வாக உள்ளது. இதனை சீர்செய்ய கோரி பல முறை ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் கூறியும் இது வரை எவ்வித நடவடிக்கை இல்லை. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் குட வாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.கோபி நாத் கூறுகையில், தாழ்வாக உள்ள மின் கம்பிவடம் பகுதியில் வீட்டு வேலை நடை பெறுகிறது. வேலையின் போது தொழிலா ளர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்களாக சேர்ந்து தாழ்வாக உள்ள மின்கம்பத்தை மூங்கில் கம்பு கொண்டு உயரப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் மழைக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெரும் விபத்து நடைபெறும் முன்பு, தாழ்வாக உள்ள மின்கம்பி வடத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.