பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, சார்ட்டு, எழுது பொருட்கள் வழங்கப் பட்டன. இதில் தலைவர் வக்கீல் சரவணன், செயலர் மணி, பொருளாளர் சந்துரு, முதல் துணைத் தலைவர் சிவக்குமார், தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் ராகுல், சேவைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரணிதரன், இயக்குநர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.