districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

ஓவியப் போட்டியில் முதலிடம் வென்ற பள்ளி மாணவிக்கு பரிசு 

அறந்தாங்கி, ஜூன் 6-  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக  தேர்வுக்கூடத்தில்  மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியை நடத்தின.

இதில் ஆவுடையார்கோவில் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி  பி. காவியா (மேல்நிலை பிரிவில் ) முதலிடம் வென்று, ரூ. 2  இரண்டாயிரம் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு   புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலரும்  பரிசுகளை வழங்கி பாராட்டினர்.  வெற்றி பெற்ற  மாணவிக்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா உள்ளிட்டோர் பாராட்டுகளை  தெரிவித்தனர்.

ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கிய 3 பேர் கைது

கும்பகோணம், ஜூன் 6- கும்பகோணத்தில், விற்பனைக்காக கடையில் பதுக்கி  வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட் சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர்  சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார் கும்பகோ ணம் பெரிய கடைத்தெரு பகுதியில்  அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர்.

அப்போது கும்பகோணம் பெரிய கடைத்தெருவில்  ஒரு கடையில்  குட்கா உள் ளிட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையில் இருந்த கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்த முரளி (60),  அதே பகுதியை சேர்ந்த சரவணன் (40), கும்பகோணம் கவரை தெருவைச் சேர்ந்த முத்து(50) ஆகிய 3 பேரை கைது செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

கல்லூரியில் மரக்கன்று நடும்விழா

திருவாரூர்,ஜுன் 6- திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜா கல்வியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) மற்றும் சூழியல் அமைப்பு  (ECO CLUB) சார்பாக கல்லூரி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ந.கணேசன்,  பொதுப்பணித்துறை அலுவலர் ஆ.பழனி வேல், கல்லூரி முதல்வர் கோ.உமாமகேஸ்வரி ஆகி யோர் மரக்கன்றுகளை நட்டனர். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ஜுன் 10-இல் துவக்கம்

திருவாரூர், ஜுன் 6- திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித் திட்ட 5-ஆவது சுற்றின் கீழ் ஜூன் 10 ஆம் தேதி  முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மாவட்டத்தில் 1,82,000 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆதலால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 3 மாதம்  வயதுள்ள கன்று முதல் சினை,கறவை மாடுகள் மற்றும் காளைகள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுக ளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்கள் கால்நடைகளுக்கு இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்கும்படி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

வாலிபர் மீது போக்சோ வழக்கு 

திருநெல்வேலி, ஜூன் 6- நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராமன் மகன் முத்து (23).  கூலித்தொழிலாளி. இவர் 16 வயதுள்ள ஒரு சிறுமியைகாதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறு மியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து வாலிபர் முத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்து துணை ஆய்வா ளர்  முகிலா விசாரித்து வருகிறார்.