புதுக்கோட்டை, மே 19-
கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல முத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடையை வெள்ளிக்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சிக்கு உட்பட்டது மேலமுத்துடையான்பட்டி கிராமம். இங்கு கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்ட நிழற்குடையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்வில் அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, பாரிவள்ளல், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.