அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் தஞ்சாவூர், பிப்.6- சம்பா, தாளடி பருவத்தில் நட மாடும் நெல் கொள்முதல் நிலை யங்கள் இயக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங் களில் சம்பா, தாளடி பருவ நெல் கொள்முதல் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுட னான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வரவேற் றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: நெல் கொள்முதல் செய்தவு டன் 48 மணி நேரத்தில் அங்கிருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும். காலம் தாழ்த்தி செய்வதால் எடையிழப்பும் முறை கேடுகளும் ஏற்படுகிறது. மழைக் காலங்களில் நெல்லை உலர்த்த உலர் களங்களை அமைத்து தர வேண்டும். ஒவ்வொரு கொள் முதல் நிலையத்திலும் 50-க்கும் குறையாமல் தார்ப்பாய்கள் வழங்க வேண்டும். பனி அதிகமாக இருப்பதால் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ளதை, 19 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். நிகழாண்டு போதிய மழையில்லாததால் மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஈரப் பதத்தை உலர்த்தும் ட்ரையர் இயந்திரமும், நவீன டிஜிட்டல் எடை இயந்திரமும் வழங்க வேண்டும். 10 கிலோ மீட்டருக்குள் ஒரு எடை போடும் இயந்திரம் அமைக்க வேண்டும்.
உரங்களின் எடை 50 கிலோ வாக உள்ள நிலையில், 40 கிலோ கொண்ட நெல் மூட்டையை 50 கிலோவாக எடை அதிகரிக்க வேண் டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி தர வேண்டும். தனியார் நிறுவன பயிர் காப்பீட்டில் பெரும் குளறுபடிகள் நடைபெறுவதால், தமிழக அரசே காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நிகழும் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை அமைத்து, முறை கேடுகளை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி விவ சாயிகளின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது பதிலளித்தார். பின்னர் அமைச்சர் அர.சக்கர பாணி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 43.28 லட்சம் டன்னும், 2022-2023 ஆம் ஆண்டில் 44.22 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதே போல, 2023-2024 ஆம் ஆண்டில் 1,875 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கத் திட்ட மிடப்பட்டு, இதுவரை 1,493 நிலை யங்கள் திறக்கப்பட்டு, செயல் பாட்டுக்கு வந்துள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டத் தில் 481 நிலையங்களும், திருவா ரூர் மாவட்டத்தில் 531 நிலையங்க ளும், நாகை மாவட்டத்தில் 171 நிலையங்களும், மயிலாடு துறை மாவட்டத்தில் 180 நிலையங் களும், கடலூர் மாவட்டத்தில் 202 நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் இது வரை 6.08 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7.42 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது 1.09 லட்சம் விவ சாயிகளிடம் இருந்து நெல் கொள் முதல் செய்யப்பட்டு, ரூ.1,619 கோடி விவசாயிகளுக்கு பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 95 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.1,200 கோடி பட்டுவாடா செய் யப்பட்டுள்ளது.
நிகழாண்டு பருவமழை குறைந்த காரணத்தால் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திரு வாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த ஆண்டு அளவுக்கு நெல் கொள்முதலாகும் என அலுவலர்கள் கூறுகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது 2 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், கடந்த ஆண்டு அளவுக்கு நிக ழாண்டும் கொள்முதல் செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்று நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமை செயல்படவும், நாள்தோ றும் ஆயிரம் முட்டைகள் கொள் முதல் செய்யவும், தேவைப்படும் இடங்களில் இரு நெல் தூற்றும் இயந்திரங்களை அமைத்து நாள் தோறும் 2 ஆயிரம் மூட்டை களைக் கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதல் செய்தவுடன் அரவை ஆலைக்கு 48 மணிநேரத் தில் அனுப்பவும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை இயக் கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். கூட்டத்துக்கு பின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்டா மாவட் டங்களில் உள்ள விவசாயிகளை அழைத்து சம்பா நெல் கொள்முதல் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தொடர்பாக ஒருங்கிணைத்து கருத்துகள் கேட்கப்பட்டது. இதில் விவசாயிகள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டு காலத் தில் பல்வேறு இயற்கை இடர்ப்பாடு களால் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பள வில் விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் ஆறுமுறை 14, 49,029 விவசாயிகளுக்கு ரூ.800 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது” என்றார். கூட்டத்தில் ஐந்து மாவட்டங் களைச் சேர்ந்த விவசாயிகள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிரந்தர கிடங்குகளை அமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
தஞ்சாவூர் வந்திருந்த அமைச்சர்களிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் அளித்த கோரிக்கை மனுவில், “தமிழ்நாடு அரசின் விரிவான கொள்முதல் செயல்பாடுகளை வரவேற்கிறோம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடங்களை உருவாக்கிட வேண்டும். நிரந்தர கட்டிடங்களை உருவாக்க தேவைப்படும் நிலங்களை பெறுவதற்கான நிதி மற்றும் வழிமுறைகள் உருவாக்க வேண்டும். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அந்தந்த வட்டாரத்தில் சேமிக்கும் வகையில், நிரந்தர கிடங்குகளை அமைக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை இயக்கம் செய்வதற்கு லாரி மாமூல் என்பது ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகை செய்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். எடை அளவை, லாஸ் என்ற முறையில் கூடுதலாக எடுக்கப்படுகிறது. சரியான அளவு கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மூட்டைக்கு கூலி உயர்த்தப்பட்டுள்ளது. பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். நெல்லுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை கிடைக்க உதவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.