districts

காதலிக்குமாறு மிரட்டல் போக்சோவில் ஒருவர் கைது

அரியலூர், ஆக.9-

     அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ஸ்டா லின் (21). இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி  வந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி னார். அவர் ஸ்டாலினின் தாயை சந்தித்து, அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளார்.  

     இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலி ருந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டி ருந்த சிறுமியை வழிமறித்த ஸ்டாலின், தன்னை காதலிக்கு மாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின்  பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசா ரணை நடத்திய காவல் ஆய்வாளர் சுமதி, வழக்குப் பதிந்து ஸ்டாலினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.