தஞ்சாவூர், நவ.18 - தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழ மை நடைபெற்ற தமிழ்நாடு அரசு - பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் ஆகியவை சார்பில் 57 ஆவது தேசிய நூலக வார விழா, மகிழ்ச்சித் திருவிழாவில் அவர் மேலும் பேசியது: தமிழ்ச் சமூகத்தைப் படிக்க வைப்பதில் ஆர்வம் உடையவர்க ளாக மாற்றுவதில் பத்திரிகை தொடங்கி விதையாக விதைத்த வர்கள் பெரியார், அண்ணா, கரு ணாநிதி என்றால் அது மிகை யல்ல. கருணாநிதி குடியரசு இத ழைப் படித்துத் தெரிந்து கொண்டு தொடர்ந்து எழுதியதால் தான் தமிழ்ச் சமூகம் படிக்கும் சமுதாய மாக மாறியது. இதன் மூலம் உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47 சதவீதத்தை எட்டி, தேசிய அள வில் முதலிடத்தில் உள்ளது. தமிழக முதல்வரும் தன்னைச் சந்திக்க வருபவர்கள் புத்தகம் வழங்க வேண்டும் என உத்தர விட்டார். தனக்கு வரும் நூல்களை முறையாக அனைத்து மாவட்ட நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பி வருகிறார் முதல்வர். மேலும், பொதுமக்கள் பயன் பாட்டுக்காக சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் தொடங்கியுள்ளார். இதேபோல, தஞ்சாவூரிலும் கலை ஞர் பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 21 பேருக்கு விருதுகள் இதைத்தொடர்ந்து, எழுத்தா ளர்களான திருக்குறள் ச.சோம சுந்தரம், கவிமுகில் நா. கோபால கிருஷ்ணன், இரா. இரத்தினகிரி, முனைவர் சண்முக. செல்வ கணபதி, முனைவர் வி.அ. இளவழ கன், எழுத்தாளர் எஸ். ராஜவேலு, முனைவர் சு. பொன்னியின் செல் வன், எழுத்தாளர் நா. ராமதாஸ் ஆகிய 8 பேருக்கு வாழ்நாள் சாத னையாளர் விருதையும், முனை வர் பா. ஜம்புலிங்கம், முனைவர் மணி.மாறன், வீ.சு.இரா. செம்பி யன், கரந்தை ஜெயக்குமார், மா. அழகிரிசாமி, தில்லை கோ. கோ விந்தராஜன், கிளமெண்ட் அந் தோணிராஜ் ஆகிய 7 பேருக்கு ஆவணக் குறிசில் விருதையும், இர.மோனிகா, மு. கார்த்திகேயன், இரா. மன்னர் மன்னன், சுஜாதா, ரா. ரேவதி, கா. செல்வகணபதி ஆகிய 6 பேருக்கு எழுத்துலகின் இளம்பரிதி விருதையும் அமைச் சர் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேக ரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீல மேகம்(தஞ்சாவூர்), என். அசோக் குமார் (பேராவூரணி), மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சு கம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணிய மூர்த்தி, ஆசிரியர் மனசு திட்ட ஒருங் கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக, வாசகர் வட்டத் தலைவர் மா. கோபாலகிருட்டினன் வரவேற்றார். நிறைவாக, மாவட்ட நூலக அலுவலர் (பொ) பா. முத்து நன்றி கூறினார்.