districts

img

இரண்டு மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கரூர் சிறுவன்

கரூர், அக்.18 -  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த  நாளை முன்னிட்டு பாரதம் சிலம்பம் அகா டமி சார்பாக, சிலம்பத்தில் மாபெரும் உலக  சாதனை புரியும் நிகழ்ச்சி கரூர் புன்னம்சத்தி ரம் சேரன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி யில் அக்.15 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாரதம் சிலம்பம் அகா டமியின் ஆசான்கள் கலை சுடர்மணி கிருஷ்ணராஜ் மற்றும் செளந்தரராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழா வில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாண வியர் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி, குழு உலக சாதனை புரிந்தனர். 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தனி நபர் உலக சாதனை புரிந்தனர். நிகழ்ச்சியில் கரூர் காகித ஆலை யில் பணிபுரியும் ஆனந்த ஐயப்ப னின் மகன் ஆ.குகன் கார்த்திக் கேஸ்வரன் (9) சிலம்பத்தில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் தொ டர்ந்து 2 மணிநேரம் சுழற்றி, ‘மாஸ்டரி  யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பிடித்தார்.  உலக சாதனை நிகழ்ச்சியில் கே.ஆர்.சுரேஷ், டி.டி.கார்த்திக், ஆர்.தணபதி, புலியூர் வீர திருப்பதி  ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  உலக சாதனை புரிந்த மாணவ-மாணவி களுக்கு மாஸ்டரி புக் ஆப் யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் நிறுவன இயக்குநர் பிருத்வி ராஜ், உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ் வழங்கினார். பாரதம் சிலம்பம் அகாடமி சார்பாக மாணவர்களுக்கு பதக்க மும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், சிலம்ப  ஆசான்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.