விருதுநகர், மே 11-
கர்நாடகா மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகரில் செய்தியா ளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது :
கர்நாடகா மாநிலத்தில் பண பலத்திற்கும், மத அர சியலுக்கும் ஊடகங்களின் பாரபட்சமான பார்வைக் கும், தேர்தல் கமிசனின் ஒரு தலைப் பட்சமான செயல் பாட்டிற்கும் இடையே அனைத்து விதமான தடை களையும் மீறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாட காவில் வெற்றி பெறப் போகி றது என்பது தெளிவாகிறது. கள நிலவரங்களும் அதை யே தெரிவிக்கின்றன.
நான் வட கர்நாடகத்தில் கடந்த 15 நாட்களாக தேர்தல் பணியாற்றினேன். அப் போது, நடுத்தர மக்கள், பெண்கள், விவசாயிகளின் மிகப்பெரிய ஆதரவு இம் முறை காங்கிரஸ் கட்சிக்கு இருந்ததை நேரில் பார்க்க முடிந்தது.
தொங்கு சட்டசபை அமையும் என்ற கருத் துக்கணிப்புகளை காங்கி ரஸ் கட்சி ஏற்கவில்லை என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அமைச்ச ரவை மாற்றம் குறித்த கேள்விக்கு? விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள் ளது. முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்ன ரசுக்கு, நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கி இருப்ப தற்கு முதல்வருக்கு நன்றி யை தெரிவித்துக் கொள்கி றேன் என்று தெரிவித்தார்.