தஞ்சாவூர், மே 20-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், முன்னாள் மாணவர்கள் சங்கம் (1991-93), புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள், பட்டுக்கோட்டை மிட் டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், டெட் தேர்வில் வெற்றி பெற்ற புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்ட மாணவி களுக்கு பாராட்டு விழா,
போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி பங்கு தந்தை மற்றும் தாளாளர் அருட்தந்தை எஸ்.ஜான்சன் எட்வர்ட் தலைமை வகித்தார்.
சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி. சஸ்டின், பேராவூரணி மருத்துவர் துரை.நீலகண்டன் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பி.வேல்முரு கன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பி.அருள்ராஜ், தொழிலதிபர் எஸ்.கந்தப்பன், பட்டுக்கோட்டை மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் சீனிவாசன், சோக்கோ கார்ப்பரேஷன் தலைவர் நாடங்காடு எஸ்.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், கடந்தாண்டு தேர்வு எழுதி அரசுப் பணிக்கு தேர்வான 5 பேருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மாநில, ஒன்றிய அரசுப் பணி கள், குடிமைப்பணித் தேர்வு, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறை பணி களுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.