புதுக்கோட்டை, ஜூன் 11-
ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், இரு அரசுகளுக்கு சண்டை மூட்டுபவராக இருக்கக்கூடாது என்றார் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
பல்கலைக்கழகங்களில் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழாக்களை ஆளுநர் காலதாமதப்படுத்தினார். தற்போது விழாக்களுக்கான தேதிகளை ஆளுநர் வெளியிட்டுள்ளார். குடியரசுத் தலைவரையே நீக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறது. அவரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் தான் ஆளுநர்.
ஒன்றிய அரசின் பிரதிநிதி தான் ஆளுநர். அவர் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர சண்டை மூட்டுபவராக இருக்கக் கூடாது. மேற்பார்வை செய்பவராகவும் இருக்கக் கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இணையாக, கருத்தரங்குகளை நடத்துவது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது எல்லாம் நீதிமன்றத்துக்குச் சென்றால் விமர்சனத்துக்கு ஆளாவார் என்றார்.