districts

img

அகில இந்திய சமாதான இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்கம் சார்பில் கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் விழாக்களையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சீகன்பால்கு ஆன்மீக மன்ற கலையரங்கில் நடைபெற்றது. தரங்கம்பாடி பங்குத்தந்தை அருளானந்து தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், 200 ஏழைகளுக்கு போர்வை, புடவை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.