மயிலாடுதுறை, டிச.20- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள பூந்தாழை கிராமத்தில் வடி கால் வாய்க்காலை மூடி மறைத்து நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள்ள முயன் றதை விவசாயிகள், பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் முதல் நாகை வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலங்களை இழந்த, குடியிருந்த குடியிருப்புகளை இழந்த விவ சாயிகள், பொதுமக்கள் இழப்பீடு கேட்டு போராடிக் கொண்டே இருந்தாலும், அரசு அதிகாரிகளின் துணையுடன் பொதுமக் களை ஏமாற்றி பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் பூந்தாழை கடைவீதி பகு திகளில், நான்கு வழிச்சாலைக்கான கான்கீ ரிட் கலவை போடும் பணிகள் கடந்த இரு நாட் களாக நடைபெறும் நிலையில், அப்பகுதி யில் சாலையின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்க்காலை, சாலை பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் முறையிட்டும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது.
இதனால், திங்களன்று இரவு வாய்க் கால் இருந்த பகுதிக்கு மேல் கான்கிரீட் கலவை போட இராட்சத இயந்திரங்களுடன் வந்ததை அறிந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆனந்தன், சிவ ராஜ், துரையரசன் உள்ளிட்டோர் பொதுமக் களுடன் வந்து சாலை பணியை தடுத்து நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த பூந்தாழை வாய்க்கால், அப்பரா சப்புத்தூர், பிள்ளை விநாயகபுரம், ஆக்கூர், பூந்தாழை மேலவெளி பகுதி விவசாய நிலங் களுக்கான வடிகாலாகவும், பூந்தாழை கீழ வெளி, மாமாகுடி மேலவெளி ஆகிய பகுதி களுக்கான பாசன வாய்க்காலாகவும் உள் ளது. இவை சில ஆண்டுகளாக பராம ரிப்பின்றி இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ஒப்பந்த நிறுவனம் சட்ட விரோ தமாக, வருவாய்த்துறை வரைபடத்தில் உள்ளதையே மாற்றி, தனி வரைபடத்தை தயாரித்து வாய்க்காலை அடைத்துவிட்ட னர் என குற்றம் சாட்டி விவசாயிகள் பல மணிநேரம் கடுங்குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதி காரிகளுடனான அமைதி பேச்சுவார்த் தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அது வரை பிரச்சனைக்குரிய பகுதியில் பணியை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.