districts

img

வறண்டு கிடக்கும் கருப்பட்டிக்காடு குளம்

தஞ்சாவூர், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் கடைமடைப் பகுதியில், பாச னத்திற்கு ஏரி, குளங்களில் தண்ணீர்  நிரப்பித் தர வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு  ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி குறையும். இந்த ஆண்டு தாமதமாக மேட்டூரிலிருந்து ஜூலை 28 அன்று மேட்டூரில் இருந்தும், ஜூலை 31 ஆம் தேதி கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் திறந்து  விடப்பட்டு 45 நாட்களை கடந்த நிலையி லும், கடைமடை பகுதிக்கு முறை வைத்து தண்ணீர் விடப்படுகிறது. இத னால் பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு போய் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தளங்களாக மாறி வரு கிறது. இப்பகுதியில் உள்ள அனைத்து  ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பி  பாசனத்தை உறுதி செய்ய வேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.  குறிப்பாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் திருவத்தேவன் ஊராட்சி, கருப்பட்டிக்காடு குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. சுமார் 20  ஏக்கர் அளவிலான இந்த குளத்தின் மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர்  விளைநிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. கல்லணைக் கால்வாய், நாகுடி பிரிவு வாய்க்கால் மூலம், கடை மடை ஏரி, குளங்கள் நிரப்பப்படும். மேலும், நேரடி பாசன வசதியும் உள்ளது. இருந்தபோதிலும் முறையாக தண்ணீர் வராததால், இப்பகுதி விவசா யிகள் இதுவரை விவசாயப் பணிகளை  தொடங்காமலும், ஒரு சிலர் தொடங்கிய  நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்தும் வரு கின்றன.  சுப்பம்மாள் சத்திரம், வல்லவன் பட்டினம், திருவத்தேவன், கருப்பட்டிக் காடு, மேட்டுக்கொல்லை பகுதி விவசா யிகளின் துயரத்தைப் போக்கவும், கடை மடைப் பாசனத்தை உறுதிப்படுத்தவும், தாமதமின்றி கடைமடைப் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பித் தர  வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகி குத்புதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.