பாபநாசம்,பிப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் - சாலியமங்கலம் சாலை முக்கியமான சாலையாகும். இந்தச் சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை வழியே மெலட்டூர், திட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்கின்றனர். இந்தத் சாலையில் திருக்கருக்காவூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. ரயில்வே கேட்டை தாண்டினால் குண்டும், குழியுமாக இந்த சாலை வாகன ஓட்டிகளை தடுமாறச் செய்கிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை விரைந்து சீரமைத்து, தரமாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.