districts

விபத்தில் மரணம் அடையும் கட்டிட தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 22-  

    தஞ்சை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

     இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரி யத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத்  தொழிலில் உள்ளவர்கள், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு  மரணம் அடைந்தால் அந்த தொழிலாளர் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர் நலவாரியம் மூலமாக புதிய ஆட்டோ வாங்கு வதற்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் https://tmuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ள லாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.