பட்டுக்கோட்டை, பிப்.7 - பெண்ணின் வயிற்றி லிருந்த 5 கிலோ எடையுள்ள அரிய வகை கட்டியை சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள் ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த கள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யன். இவரது மனைவி செல்வி (47). இவருக்கு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த செல்வியை கடந்த ஒரு வாரத் திற்கு முன்பு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அப்போது அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் செல்விக்கு அனைத்து வகை பரிசோத னையும் செய்தபோது, அவ ரது வயிற்றில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அரிய வகை கட்டி ஒன்று இருந்தது தெரிய வந்தது. உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்ப ழகன் ஆலோசனையின் பேரில், தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தலைமை மகப் பேறு மருத்துவர் மீனா நியூட் டன், தஞ்சாவூரில் இருந்து வந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜு மைக் கேல், அறுவை சிகிச்சை நிபு ணர் பிரசன்னா, மயக்க மருந்து நிபுணர் தம்பு சுதா கர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவி னர், செவ்வாய்க்கிழமை செல்விக்கு சுமார் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவரது வயிற்றிலிருந்த சுமார் 5 கிலோ எடையுள்ள அரியவகை கட்டியை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து செல்வி தற்போது நலமுடன் உள்ளார். பெண்ணின் வயிற் றிலிருந்த 5 கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்த பட்டுக்கோட்டை அரசு மருத்து வர்களுக்கு செல்வியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.