பெரம்பலூர், ஏப்.23 -
பெரம்பலூர் மாவட்டத்தில் தீக்கதிர் வாசகர் வட்டம் நடத்தும் இரண்டாம் ஆண்டு தொடர் மார்க்சீய பயிற்சி வகுப்பு ஜனவரி 21 முதல் தொடங்கி சனிக்கிழமை தோறும் நடை பெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பு ஏப்.29 அன்று நிறைவுபெறுகிறது. ஏப்.22 அன்று லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு சிபிஎம் குன்னம் வட்ட செயலாளர் சி.செல்ல முத்து தலைமை வகித்தார். மருத்துவர் சி. கருணாகரன் வரவேற்றார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் முன்னிலை வகித்தார். ‘எங்கே போகிறது இந்தியா’ எனும் தலைப் பில் சிபிஎம் மாநிலக்குழு திருப்பூர் எஸ்.முத்துக்குமரன் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நாட்டிலுள்ள பல்வேறு நடவடிக்கை களை வளர்த்தெடுத்த பங்கு கம்யூனிஸ்டு களுக்கு உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஏப்.21 அன்று, 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 12 மணிநேர வேலை என்பது பெரும் துன்பமாக மாறும். அதிலும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். எனவே தமிழக முதல் வர் 12 மணிநேர வேலை என்ற சட்ட மசோ தாவை திரும்ப பெற வேண்டும் என்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. கலையரசி, ஏ.கே.ராஜேந்திரன், ஆர்.கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி நன்றி கூறினார்.