districts

img

சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் 9 ஆவது ஆண்டு விழா

பெரம்பலூர், டிச.24 - பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி யில் 9 ஆவது ஆண்டு விழா  சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் சந்ரோத யம் வரவேற்றார். பள்ளி  தாளாளர் டாக்டர் ஆ.ராம் குமார் தலைமை வகித் தார். சோழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஜி.குமார் வாண்டையார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரி சளித்தார். 10 ஆம் வகுப்பில் கடந் தாண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ரவி ராஜூக்கு ரூ.10,001, 12 ஆம்  வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி வி.என்.ஹரிணிக்கு ரூ.12,001 பரி சாக வழங்கப்பட்டது.  பள்ளி துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம், செயலாளர் ஆர்.சிவக் குமார், மேலமாத்தூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி  தாளாளர் டி.ஜி.பழனிவேலு, பள்ளியின் பங்குதாரர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.