மயிலாடுதுறை, ஜன.21- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூரில் நடைபெற்ற திருமெய்ஞானம் தியாகி கள் நினைவுதின பொதுக்கூட்டத்தில் தரங்கம் பாடி ஒன்றியத்துக்குட்பட்ட பொறையார், தில்லையாடி, துடரிப்பேட்டை, திருவிடைக் கழி, செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட் பட்ட ஆக்கூர், கீழையூர், சௌரியாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 80 குடும் பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் ஆகியோர் கதர் ஆடை போர்த்தி வரவேற்றனர்.