சீர்காழி , ஜன , 27 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய ஆணையர் ஆர்.ஜி.இளங்கோவன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்.சுமதி வரவேற்புரையாற்றி னார். வட்டார வளர்ச்சி அலுவலர் கை. அருள்மொழி முன்னிலை வகித்தார். சீர்காழி ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கொடியேற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு , பேனா வழங்கி னார். உதவி பொறியாளர் பி.சிவக்குமார் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றியக் குழு துணை தலைவர் உஷாநந்தினி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தி.விஜேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு, குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பா ளர் ஜே.கே.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.