தஞ்சாவூர், ஜூன் 4 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர்ப் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்கள் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.359.16 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வரு கிறது. இதன் மூலம் 13,463 விவசாயிகள் பயன் அடைந் துள்ளார்கள்.
கூட்டுறவுத்துறை மூலம் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.456.65 கோடி கடன் வழங்கி நிர்ணயிக்கப்பட்ட குறி யீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் முதல் தேதி தொடங்கி மே 26-ஆம் தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகு படி பருவத்திற்குத் தேவையான 6512.07 டன் உரங்கள் இருப்பு உள்ளது. இவ்வாறு தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.