திருச்சிராப்பள்ளி, ஜூன் 22-
மின்வாரியத்தில் காலியாகவுள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வியாழனன்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். பெருநகர் திட்டச் செயலா ளர் எஸ்.கே.செல்வராஜ், திட்டப் பொரு ளாளர் பழனியாண்டி, கோட்டத் தலை வர் கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் மனோ கரன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநி லத் துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். கோட்டச் செய லாளர் சியாஜ்தீன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், விபத்தில்லா மின்வாரியம் அமைந்து மின் ஊழியர் உயிர் காக்க வேண்டும், 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணி யாளர்களுக்கு 6 சதமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்க வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியா ளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண் டும், கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும், கேங்மேன் பணியா ளர்களை கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும், வாரிய ஆணை எண் 02-ஐ ரத்து செய்ய வேண் டும், ஒப்பந்த ஊழியர்களை அடை யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பகுதிநேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிளாஸ் I & II அதி காரிகளுக்கு ஊதிய உயர்வு, தொழி லாளர்களுக்கு வழங்குவது போல 4 ஆண்டுகள் என இருந்ததை 10 ஆண்டு கள் என மாற்றியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.