districts

img

போராட்டக் களத்திலேயே வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்

மயிலாடுதுறை, டிச.25 -  மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நான்கு வழிச்சா லையால் பாதிக்கப்படும் விவசாயி கள், ஏழைகளுக்கான உரிய இழப்பீடு கேட்டு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் மாவட்டச் செய லாளர் டி.சிம்சன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமை காலை துவங்குவதற்கு முன்பு வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி போராட்டக் களத்திலேயே சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் மயி லாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏ.வி சிங்காரவேலன், ப.மாரியப்பன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செய லாளர்கள் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் வீர வணக்கம் செலுத்தினர். விவசாயிகளின் போராட் டத்திற்கு ஆதரவாக பொறையார்  சிபிஎம் கட்சி கிளை சார்பில் அரிசி,  வாட்டர் கேன்கள் ஆகியவற்றை  கிளை செயலாளர் ஆல்பன்  போராட்ட ஒருங்கிணைப்பாளர்களி டம் வழங்கினார். சமூக ஆர்வலர் இயற்கை விவசாயி மாமாகுடி ஆனந்தன் ஒரு நாள் உணவுக்கான ஏற்பாடுகளையும், இதர செலவு களையும் வழங்கினார். காழியப்பநல்லூரை சேர்ந்த  சமூக ஆர்வலர் சுதாகர் அரிசி மூட்டையை வழங்கினார். மீத்தேன்  திட்ட எதிர்ப்பு இயக்க கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் ஜெயராமன் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். பல்வேறு முற்போக்கு அமைப்பு களின் ஆதரவுடன் 5 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொ டர்ந்து நடைபெற்று வருகிறது.