இலவச மருத்துவ முகாம்
பொன்னமராவதி, நவ.20 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திமுக புதுக்கோட்டை தெற்கு மருத்துவ அணி மற்றும் செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. முகாமை துணைச் செயலாளர் அண்ணா மலை ரகுபதி துவக்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், பெண்கள் நலம், கண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது. மேலும் பல் சுத்தம் செய்தல், சொத்தைப்பல் அடைத்தல், பல் செட்டு கட்டுதல் உள்ளிட்ட சிகிச் சையும் மேற்கொள்ளப் பட்டன. இசிஜி, சுருள் படம், எக்கோ ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோத னைகள் செய்யப்பட்டன.
சுவாமிமலையில் கந்தசஷ்டி விழா
கும்பகோணம், நவ.20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே யுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக் கோயில், அறுபடை வீடு களில் நான்காம் படை வீடாக கருதப்படுகிறது. சிறப்புமிக்க இந்த சுவாமி மலையில் ஆண்டுதோ றும் கந்தசஷ்டி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த நவ.12 அன்று விழா தொடங்கியது, விழா வின் 6 ஆம் நாளான சனிக் கிழமை இரவு கந்த சஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹாரம் நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஞாயிறன்று தேவசேனா திருக்கல்யாண வைப வம் நடைபெற்றது.
மூதாட்டி தற்கொலை
அரியலூர், நவ.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிரா மம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் வைத்தி லிங்கம். இவரது மனைவி கமலம் (88). இவர் தனது மூத்த மகன் கலியபெருமாள் மற்றும் இளைய மகன் குருநாதன் ஆகியோர் வீட்டில் மாறி மாறி சாப் பிட்டு வந்துள்ளார். இவ ருக்கு கடந்த சில தின நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் தவித்து வந்ததாகவும், இறந்து விடலாம் என புலம்பிய தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயி றன்று வெளியில் சென்ற வர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் குருநாதன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இலை யூரிலிருந்து உடையார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலை யில் கமலம் இருந்துள் ளார். இதனை அவ் வழியே சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண் டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கம லத்தின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வரு கின்றனர்.
பேராவூரணியில் நூலக வார விழா
தஞ்சாவூர், நவ.20- தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ‘நூல கம் ஓர் ஆலயம்’ நூலக வார விழா தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணியில் நடை பெற்றது. விழாவையொட்டி பள்ளி மாணவர் களுக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் நல் நூலகர் விருது பெற்ற நூலகர் வேங்கட ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெரியார் அம்பேத்கர் நூலக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஆயர் த.ஜேம்ஸ், ஆசிரியர் சிவக்குமார், மருத்துவர் அருண் சுதேஷ், கவிஞர் தா.கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். திட்டத்தின் ஒருங் கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் விழாவை ஒருங்கிணைத்தார்.
பவுண்டரீகபுரம் கூட்டுறவு வங்கியில் 454 பேரின் நகைக் கடன் தள்ளுபடி
கும்பகோணம், நவ.20 - ஏழை, எளிய மக்கள் அடகு வைத்த 5 பவுனுக்கு உட்பட்ட நகைகளின் அசல் மற்றும் வட்டியை அரசே ஏற்றுக் கொண்டு அடகு வைத்த மக்களுக்கு நகையை தமிழக அரசு மீட்டுக் கொடுக்கும் என திமுக தேர்தல் அறிக் கையில் கூறியிருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பவுண் டரீகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தால் 31 மார்ச் 2021 வரை 656 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திரும்ப கொடுக்கப்பட்டன. பல்வேறு ஆவணங்கள் குறைபாடு காரணமாக கொடுக்கப்படாத நிலையில், மேல் முறையீடு செய்த 252 பேருக்கு ரூ.83 லட்சம் மதிப்பிலான நகைகளை தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழி யன் பயனாளிகளுக்கு வழங்கினார். இதன்மூலம் பவுண்டரீகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தால் மட்டும் 908 பயனாளி களுக்கு ரூ.2.50 கோடி கடன்தொகை அரசால் திரும்பக் கொடுக்கப்பட்டு உள்ளது இதில் சங்கச் செயலாளர் சீனிவா சன், செயலாட்சியர் ஆனந்தகுமார், திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பயனாளி கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எஸ்.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் மேல்முறையீடு செய்த 202 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகளை தமிழக அரசு தலைமை கொறடா வழங்கி னார்.
நுண்நிதி நிறுவனத்திற்கு செலுத்தும் தவணையை வருமானத்துடன் இணைக்கக் கூடாது! கிராமப்புற குடும்பத் தலைவிகள் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, நவ.20 - திருச்சியில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டத் தலை வர் தங்கதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அம்மனுவில், “தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வரு வது வரவேற்கத்தக்கது. கிராமப்புற குடும்ப தலை விகள் ஆரம்பத்தில் விண்ணப்பித்ததில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நிரா கரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறை யீடு செய்த நிலையில், பலரின் மனுக்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள் என்ற கார ணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில், கிராமத்தில் வசிக்கும் பல குடும்பத்தினர் விவசாயத்தையும், விவசாயக் கூலி வேலையையும் நம்பி இருக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் கிடைப்பதில்லை. நூறு நாள் வேலை யும் தொடர்ச்சியாக கிடைப்பது இல்லை. நடுத்தர மக்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நான்கு, ஐந்து நுண்நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி விடு கின்றனர். திருப்பி கடனை செலுத்தும் நாளில், அவர்கள் யாரிடமாவது கடன் வாங்கி கட்டி விடு கின்றனர். கிராமப்புற குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித் தாலோ அல்லது மேல்முறையீடு செய்தாலோ, குடும்ப வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்று குறிப்பிட்டு இருந்தால் மனுக்களை பரிசீலனை செய்யும் அதிகாரிகள், அக்குடும்ப தலைவியின் ஆதார் எண் மூலம் அவர்கள் நுண்நிதி நிறுவ னத்தில் செலுத்தும் தவணைத் தொகையை யும் அவருடைய வருமானத்தில் சேர்த்து ‘கூடுதல் வருவாய் பெறுகிறீர்கள்’ என்று காரணம் காட்டி இம்மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர். இதனால் பல குடும்பத் தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே கிராமப்புற ஏழை -எளிய குடும்பத் தலைவிகள் நுண்நிதி நிறுவ னத்திற்கு செலுத்தும் தவணைத் தொகையை, அவருடைய வருமானத்துடன் இணைக்க வேண் டாம் என்று கிராமப்புற மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் வி.தொ.ச மனு
திருச்சிராப்பள்ளி, நவ.20 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜேஷ் கண்ணா ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அம்மனுவில், “திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலை கோட்டத்தில், பாதாள சாக்கடை பணிக்காக எஸ்ஐடியிலிருந்து கழ்கண்டார் கோட்டை வரை உள்ள பிரதான சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதித்த னர். பணிகள் முடிந்து, அந்த இடத்தில் ஜல்லிக் கற்கள் மட்டும் போட்டுள்ளனர். இதனால் இரு சக்கர வாகனத் தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயிர் சேதம் ஏற்படுவதற்குள் மேற்படி சாலையை செப்பனிட்டு தருமாறு அப்பகுதி பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என கூறியிருந் தார்.
தேசிய நூலக வார விழா நிறைவு
அரியலூர், நவ.20 - அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கம், அரியலூர் நூலக இயக்கம் சார்பில் நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் பங்கேற்று, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அரசு சிமெண்ட் ஆலை துணை மேலாளர் அ. பாஸ்கர், பேரா.தமிழ்மாறன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை, வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உரையாற்றி னர். விழாவில் 10-க்கு மேற்பட்டோர் ரூ.1,000 செலுத்தி நூலக புரவலராக இணைந்தனர்.
பயனற்றுக் கிடக்கும் அடிகுழாயை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் உறுதி
பொன்னமராவதி, நவ.20 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் முள்ளிப்பட்டியில் பயனற்று இடையூறாக இருக்கும் அடிகுழாயை அப்புறப்படுத்தக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நவ.21 அன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவ.18 (சனிக்கிழமை) அன்று பொன்னமராவதி வட்டாட்சியர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் பக்ருதீன், விதொச ஒன்றியத் தலைவர் பழனி யப்பன், மாவட்டப் பொருளாளர் சண்முகம், மாவட்டச் செயலாளர் சலோமி, ஒன்றியச் செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, கிளைச் செயலாளர் முருகே சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், “15 தினங்களுக்குள் பயன்படாமல் உள்ள அடிகுழாயை அகற்றிவிட்டு, பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட் டது.
தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
கரூர், நவ.20 - தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென பள்ளி மேலாண்மை குழு பெற் றோர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேலிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நரிக் கட்டியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 419 மாணவ, மாணவிகள் படித்து வருகின்ற னர். தற்போது ஏழு வகுப்பறை மட்டுமே உள்ளது. ஒரு வகுப்பறையில் 80 மாணவ, மாணவிகள் படிக்கும் நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் இரண்டு ஆசிரி யர்கள் பாடம் நடத்துகின்றனர். மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு கூடுதலாக வகுப்பறைகள் அமைத்து கொடுக்க வேண்டும். இப்பள்ளியை சுற்றி நடுநிலைப் பள்ளி ஏதும் இல்லாத தால், இந்த தொடக்கப் பள்ளியை 8 ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது” கூறியிருந்தனர்.
நெல்லையில் கனமழை பல்லாங்குழியான சாலைகள்
ருநெல்வேலி, நவ .20- நெல்லை மாநகரப் பகுதி யில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடு கிறது. சாலை மற்றும் தெரு ஓரங்களில் மழை நீர் வடி கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் ஆங் காங்கே தேங்கியும், பள்ளங் களில் நிரம்பி வழிகிறது. இத னால் இருசக்கர வாகனங் களில் செல்பவர்கள், நடந்து செல்லும் பொதுமக்கள் கடு மையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதே போல் சாலைகளில் பள்ளங் கள் ஏற்பட்டு அது பரந்து விரிந்து வருகிறது. இதனால் சாலைகள் போக்கு வரத்திற்கு லாயக்கற்று வாக னங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் உள்ளது. சிதில மடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கமிஷ னர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற னர்.
அம்மா உணவக கூரை உடைந்து விபத்து: குளச்சல் தம்பதியர் படுகாயம்
நாகர்கோவில், நவ.20- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் உள்ளே கடந்த 10 ஆண்டுகளாக அம்மா உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத் தால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் பயன் பெற்று வந்த னர். காமராஜர் சாலையை சேர்ந்த சேவியர் (57), மனைவி மல்லிகா (52) ஆகியோர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காலையில் இந்த அம்மா உணவகத்தில் காலை உணவு சாப்பிடுவது வழக்கம். திங்கள்களன்று (நவ.20) காலை வழக்கம் போல் இருவரும் வேலை முடிந்து அம்மா உண வகத்திற்கு காலை உணவு சாப்பிட சென்றனர். அங்கு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உணவகத்தின் மேற்கூரையின் பால் சீலிங் திடீரென உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந் தனர். உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் தனியார் மருத்துவமனை யில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல றிந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டார். உடைந்து விழுந்த கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
புதிதாக விதிக்கப்பட்டுள்ள பழைய சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுட்கால வரி ரத்து கோரி மனு
திருச்சிராப்பள்ளி, நவ.20 - டூரிஸ்ட் கார் மற்றும் வேன் ஆபரேட் டர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், “தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா வாகன ஓட்டு நர்களும், உரிமையாளர்களும் சுற்றுலா வாக னங்களை வாடகைக்கு இயக்கி வாழ்வா தாரம் நடத்தி வருகின்றோம். நாங்கள் ஏற்க னவே டீசல், சுங்கவரி, வாகன உதிரி பாகங் கள் விலை உயர்வு போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். இந்நிலையில் எங்களது வாகனங்க ளுக்கு பல ஆண்டுகளாக காலாண்டு வரி செலுத்தி வருகிறோம். தற்போது, திடீரென்று தமிழக அரசு வாழ்நாள் வரியை நடைமுறைப் படுத்தி உள்ளது. ஆயுட்கால வரி மோட்டார் தொழிலாளர்களையும், உரிமை யாளர்களையும் மிகவும் பாதிப்படையச் செய்யும் வகையில் உள்ளது. இதனால் ஏற்கனவே 10 ஆண்டுகள், 5 ஆண்டுகளான பழைய வாகனங்களுக்கும் மீண்டும் நாங்கள் ஆயுட்கால வரி செலுத்து வது என்பது இயலாத ஒன்றாகும். அது எங்கள் தொழிலும் வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் எங்கள் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே பழைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட் கால வரியை உடனடியாக ரத்து செய்து, எங்க ளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியிடம் மனுவை கொடுத்த போது சங்க நிர்வாகிகள் வித்யாசாகர், ஜனார்த்தனன், செல்வம், கதிர்காமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.